இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்*
குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே*
பதவுரை:
இன்று தொட்டும் – இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே
எழுமையும் – இனிமேல் உள்ள காலமெல்லாம்
எம்பிரான் – அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான
நின்று தன் புகழ் – எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே
ஏத்த அருளினான் – நிலைத்திருக்கும்படி அருளினான்
குன்ற மாடத் – சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த
திருக்குருகூர் நம்பி – திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர்
என்றும் என்னை இகழ்விலன் – எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது காப்போன்
காண்மினே – காணுங்கள்