திருப்பாவை தனியன்கள் பதவுரை

தனியன் 1:

நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ|

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே

கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:||

பதவுரை:

யா கோதா- எந்த ஆண்டாள், 

நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் — நப்பின்னைப் பிராட்டியினுடைய திருமார்பிலே உறங்குபவனாய்,  

ஸ்வோச் சிஷ்டாயாம்- தன்னாலே சூடிக்களையப்பட்ட,

ஸ்ரஜி-மாலையிலே,

நிகளிதம்-கட்டப்பட்டவனாயிருக்கும்,

க்ருஷ்ணம்-க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை,

 உத்போத்ய-(துயில்)உணர்த்தி,

ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தம்-நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களினால் ஸித்திக்கிற, 

ஸ்வம் – தன்னுடைய,

பாரார்த்யம்-பாரதந்த்ர்யத்தை,

அத்யாபயந்தீ-அறிவித்து

பலாத்க்ருத்ய-வலுக்கட்டாயமாக 

புங்க்தே-அனுபவிக்கிறாளோ, 

தஸ்யை- அப்படிப்பட்ட ஆண்டாளுக்கு

பூயோ பூய ஏவ- மறுபடியும் மறுபடியும்,

இதமிதம் நம: நன்றியோடுகூடின நமஸ்காரம்

அஸ்து-ஆகவேண்டும்.

தனியன் 2:

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

பதவுரை:

அன்ன வயல் – அன்னப்பறவைகள் (ஹம்ஸங்கள்) ஸஞ்சரிக்கிற வயலையுடைய,

புதுவை ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவவதரித்தருளின ஆண்டாள்,

அரங்கற்கு-ஸ்ரீரெங்கநாதனுக்கு

பன்னு-ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட,

திருப்பாவை- திருப்பாவையாகிற,

பல் பதியம் -பல பாட்டுக்களை, 

இன் இசையால்- செவிக்கினிய இசையாலே,

நல் பாமாலை-அழகிய பாட்டுக்களாகிற மாலையை, 

பாடிக் கொடுத்தாள்-பாடிக் கொடுத்தாள்,

பூமாலை-பூக்களால் ஆன மாலையை, 

சூடிக் கொடுத்தாளை-(தன் திருக்குழலிலே) சூடி (எம்பெருமானுக்குக்) கொடுத்தவளான ஆண்டாளை 

சொல்- (நெஞ்சே அனுஸந்திப்பாயாக) பாடுவாயாக.

தனியன் 3:

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை

பாடியருளவல்ல பல்வளையாய்!-நாடி நீ

வேங்கடவற்கென்னை விதியென்ற இம்மாற்றம்

நாம் கடவா வண்ணமே நல்கு.

பதவுரை:

சூடி- (மாலையை திருக்குழலிலே) சூடி,

கொடுத்த—(எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த, 

சுடர் கொடியே-பிரகாசிக்கும் பொற்கொடிபோன்ற வடிவையுடையவளே! 

தொல்-பழமையான,

பாவை-திருப்பாவையை,

பாடி அருளவல்ல-பாடி உபகரிக்க வல்லவளாய், 

பல் வளையாய் – பல வளைகளை அணிந்தவளாய் விளங்குபவளே!

நாடி- (மன்மதனை) அடைந்து, 

‘நீ-(மன்மதனான) நீ. 

என்னை- (அவனைக் காண ஆசைப்படுகிற) அடியேனை. 

வேங்கடவற்கு—திருவேங்கட மலையிலே வாழும் எம்பெருமானுக்கு, 

விதி- (கைங்கர்யம் செய்யும்படி) விதிக்கவேணும்’. 

என்ற-என்று அருளிச்செய்த, 

இம் மாற்றம்-இப்பாசுரத்தை, 

நாம்- (உனக்கு என்றும் அடியராயிருக்கிற) நாம்

கடவா வண்ணமே – மீறாதபடி, 

நல்கு-உபகரிக்கவேண்டும், கடாக்ஷிக்கவேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top