பாசுரம்:
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணா
பாடேலோரெம் பாவாய்.
பதவுரை:
எங்களை – (உன் தோழியராகிய) எங்களை
முன்னம் எழுப்புவான் – முதன் முதலில் எழுப்புவதாக
வாய் பேசும்- வாயாலே சொல்லிவைத்த
நங்காய் – பரிபூர்ணையே!
நாணாதாய்- (சொன்னபடி செய்யாதொழிந்தோமே’ என்னும்) வெட்கமுமற்றவளே!
நா உடையாய்-(இன் சொற்களைப் பொழியும்) நாவை உடையவளே!
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் – உங்களுடைய புழைக்கடையிலுள்ள தோட்டத்தில் விளங்கும் குளத்தினுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து-செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து
ஆம்பல்வாய் கூம்பினகாண்—கருநெய்தல் மலர்கள் குவிந்துகொண்டன காண்! (மேலும்)
செங்கல் பொடி கூறை- காஷாயம் படிந்த உடையை அணிந்தவரும்
வெண்பல் – வெளுத்த பற்களையுடையவரும்
தவத்தவர் – தபோவேஷத்தை உடையவருமான சைவஸந்யாஸிகளும்
தங்கள் திருக்கோயில்-தங்களுடைய தெய்வஸந்நிதிகளில்
சங்கு இடுவான்-சங்கு ஊதுகைக்காக
போகின்றார் – செல்கின்றனர்
சங்கொடு சக்கரம்- சங்கத்தையும் சக்கரத்தையும்
ஏந்தும்— (இருகைகளிலும்) லாகவமாக தரிக்கும்
தட கையன் – பெரிய கைகளை உடையவனாய்
பங்கய கண்ணானை-செந்தாமரை போன்ற கண்களை உடையவனான ஸர்வேச்வரனை
பாட- (ப்ரீதிக்குப் போக்குவிட்டுப்) பாடுவதற்காக
எழுந்திராய்- எழுந்திருப்பாயாக