கண்ணிநுண் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 11

அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே* 

பதவுரை:

அன்பன் தன்னை – விரோதியிடத்திலும் காருண்யம் கொண்டவனான எம்பெருமானை

அடைந்தவர்கட்கெல்லாம் – சரணாக பற்றினவர்களுக்கெல்லாம் 
அன்பன் – கருணையை பொழிபவனாய் 
தென் குருகூர் – தென் குருகூரில் அவதரித்த 
நகர் நம்பிக்கு – திருநகரி குண பூரணரான ஆழ்வாரிடத்தில் 
அன்பனாய் – அதி ப்ரீத்தி உடையவராய் 
மதுர கவி – மதுரமான (தேனாக உதிக்கின்ற) வாக்கினை உடைய ஸ்ரீ மதுரகவியாழ்வார் 
சொன்ன சொல் – அருளிச்செய்த பாசுரங்களை 
நம்புவார் பதி – தனக்கு தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களுடைய இருப்பிடம் 
வைகுந்தம் காண்மினே – நிச்சயம் “பரமபதம்” என்றே கண்டுகொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top