கண்ணிநுன் சிறுத்தாம்பு – பதவுரை – பாசுரம் 2

நாவினாற்நவிற்றின்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி 
பாவினின்னிசை பாடித்திரிவனே.

நாவினாற் நவிற்றின்பம் எய்தினேன் – நாவினால் சொல்லப்படும் சொல் ஒன்றினாலேயே முழுமையான இன்பத்தையடைந்தேன்.

மேவினேன்- என் தலைக்கு மேலாக பெற்றேன்.

அவன் பொன்னடி – ஆழ்வாரது கமலப்பதங்களை.

மெய்மையே – இது சத்யமான ஒன்றாகும்.

தேவுமற்றறியேன்- வேறு தெய்வம் உண்டு என்று நான் அறியவும் வேண்டா. 

குருகூர்நம்பி – தென்திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரைத் தவிர. 

பாவினின்னிசை – திருவாய்மொழியின் இசையை 

பாடித்திரிவனே  – இவ்வுலகத்தில் தாரகமாய்ப் பாடித்திரிவனே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top