பொதுதனியன்கள் – பதவுரை

ஶ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்|
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்||

தனியனை சமர்ப்பித்தவர் : ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.

ஶ்ரீசைலேச – “ஶ்ரீசைலேசர்” என்கிற ஸ்வாமி ஸ்ரீதிருவாய்மொழிப் பிள்ளையின்

தயாபாத்ரம் – எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்

தீபக்யாதி – பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற

குணார்ணவம் – குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்

யதீந்திர ப்ரவணம் – யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான

வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் – அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்

(ரம்ய – அழகிய) (ஜாமாது – மணவாளன்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top